வைகையில் விழித்து
வாசலில் நீர் தெளித்து
புள்ளிகளை இணைத்து
புதுக் கவிதை வடித்து
அவசரமாய் நீராடி,
அடுப்படியில் போராடி
பிஞ்சுகளை நீராட்டி
பிரியமுடன் சோறூட்டி
அத்தானோ(டு) அவசரத்தில்
அலுவலகம் அனுப்பிவைத்து
பிள்ளை நிலாக்களைப்
பள்ளிதனில் பயலவிட்டு
ஒரு பணியின் முடிவுரையில்
மறு பணியின் முகவுரையை
இணை தெழுதும்,
அஞ்சு நாள் வாரத்தில்
அலுவலக நேரத்தில்
சென்னை மாநகரத்தில்
அன்னைமார் நரகத்தில்
அதிகாரி அதிகாரம்
அவர் பேச்சு அதி-காரம்
பெருங்கோப்பெண்டு இனம்
பெருங்கோப்பு பெண்டிராகும்
அஞ்சடிக்கும் வேளை வரை
நெஞ்சொடியும் மாலை வரை
மறுபடியும் காலை வரும்
மறுநாளும் வேலை வரும்
தப்படியே இல்லாமல்
இப்படியே இவர் வாழ்க்கை.
பணிபுரியும் பாவையராம்
பெண் இனத்தின் பின்னனியில்
விரிந்திருக்கும் இன்னலினை
புரிந்திடுவீர், திருந்திடுவீர்
ராமசாமி
SIM செய்திமடல்
மார்ச் 1987
திங்கள், 2 பிப்ரவரி, 2009
சனி, 31 ஜனவரி, 2009
காக்காய் பிடித்தல்
"காக்காய்பிடித்தல்" என்று தமிழிலில் ஒரு தொடர் உண்டு.இதற்கு காக்கா பிடித்தல்"என்று பொருள் அல்ல.யாரவது ஒருவரை எப்படியாவது ஏமாற்றி நம் வசப்படுதிக் கொள்ளுவதை "காக்கா பிடித்தல்" என்கிறோம்.
"கால்கை பிடித்தல்" என்பதே திருமாறி உருமாறி "காக்கா பிடித்தல்" என்றாகிவிட்டது.காரியம்ஆக வேண்டுமானால் கால்கையை பிடித்து சமாதானப் படுத்துதல் என்று எல்லாப் பேச்சுவழக்கிலும் இருக்கிறது."கழுதையானாலும் காரியம் ஆக காலைப்பிடி"என்று பழமொழி உண்டு.
கால் கையைப் பிடித்து ஒருவரிடமிருந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் செயலே பிற்காலத்தில் "காக்காய் பிடித்தல்"என்றா கிவிட்டது.
"கால்கை பிடித்தல்" என்பதே திருமாறி உருமாறி "காக்கா பிடித்தல்" என்றாகிவிட்டது.காரியம்ஆக வேண்டுமானால் கால்கையை பிடித்து சமாதானப் படுத்துதல் என்று எல்லாப் பேச்சுவழக்கிலும் இருக்கிறது."கழுதையானாலும் காரியம் ஆக காலைப்பிடி"என்று பழமொழி உண்டு.
கால் கையைப் பிடித்து ஒருவரிடமிருந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் செயலே பிற்காலத்தில் "காக்காய் பிடித்தல்"என்றா கிவிட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
